தெறி படத்தை ரீமேக் செய்யாதீங்க…செஞ்சா தற்கொலை பண்ணுவேன்.! பரபரப்பை கிளப்பிய ரசிகர்.!

Default Image

தமிழில் ஒரு படம் வெற்றியடைந்து விட்டார் அதனை மற்ற மொழிகளில் வேற ஹீரோவை வைத்து ரீமேக் செய்வது வழக்கமான ஒன்று. அந்த வகையில், விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான சூப்பர் திரைப்படம் “தெறி”. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்நிலையில், இந்த படம் தமிழில் வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்த தெலுங்கில் ரீமேக்கை இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் இயக்கவுள்ளதாகவும், படத்தில் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் பிரபல நடிகரான பவான் கல்யாண் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

இதையும் படியுங்களேன்- 16yearsofGvPrakash :வருடம் 16 ஆனாலும் உங்க இசைக்கு வயது ஆயிரம்… இசை அசுரனின் டாப் லிஸ்ட்…..

இந்த நிலையில், இந்த தகவலை பார்த்த பவான் கல்யாண் ரசிகர் ஒருவர் தெறிப்படத்தின் ரீமேக் படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறி தற்கொலை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த கடிதம் என்று ஒரு கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பவான் கல்யாண் தொடர்ந்து ரீமேக் படங்களில் நடித்து வருகிறார். இதனால் ஒரிஜினல் படங்களில் அவர் நடிக்க வேண்டும் என அவருடைய ரசிகர்கள் ஆசை படுகிறார்கள். அதனாலே இந்த மாதிரி ஒரு கடிதத்தை அந்த ரசிகர் எழுதியுள்ளார் என தெரிகிறது. ஒரு படத்தில் நடிக்க கூடாது என்பதற்காக தற்கொலை கடிதம் எழுதியுள்ளது சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்