சிறகடிக்க ஆசை சீரியல்.. முத்துவின் அசத்தலான நடிப்பால் மீண்டும் காலேஜுக்கு செல்லும் சத்யா..!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 9] எபிசோடில்.. முத்து மீது போலீஸ் கம்ப்ளைன்ட் செய்த சத்யாவின் பிரின்சிபல்.

sathya (1) (1) (1)

சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 9] எபிசோடில்.. முத்து மீது போலீஸ் கம்ப்ளைன்ட் செய்த சத்யாவின் பிரின்சிபல்.

சத்யாவிற்காக முத்து போடும் பிளான் ;

மனோஜ் ஷோரூம்க்கு  லாட்டரிக்கு பொருள் கேட்டு வந்தவர் மறுபடியும் வந்திருக்கிறார் ..இப்ப மனோஜ் கேக்குறாரு என்ன பிரச்சனை பண்ண வந்திருக்கியா ..அதுக்கு அவரு இல்ல நான் இப்போ கோடீஸ்வரன் ஆனா உன் கடையில் பொருள் எடுக்க மாட்டேன் அப்படின்னு  சொல்றாரு.. இத கேட்ட மனோஜ்க்கு கோவம் வருது அப்போ இந்த இடத்தை விட்டு நீ கிளம்புனு சொல்றாரு அந்த டைம்ல மனோஜோட பார்க் பிரண்ட்  வந்துட்டாரு.. மனோஜ சமாதானப்படுத்துறாரு .. எல்லாருக்குமே நல்லது நடக்குது ஆனா எனக்கு மட்டும் நல்லது நடக்க மாட்டேங்குதுன்னு பீல் பண்ணி சொல்றாரு மனோஜ். இப்போ முத்து மீனா கிட்ட சத்யாவை எப்படியாவது எக்ஸாம் எழுதி வைக்கணும் அதுக்கு என்கிட்ட ஒரு ஐடியா இருக்குதுன்னு சொல்ல ஆரம்பிக்கிறாரு.

நாளைக்கு அந்த பிரின்ஸ்பால நம்ம ரெண்டு பேருமே போய் பார்ப்போம்.. ஆனா சின்னதா ஒரு நாடகம் ஆடனும் நான் குடிச்சிட்டு உன்னை அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீயும்  என்னை திட்டுற  மாதிரி நடி அப்படின்னு சொல்லி பிளான் போட்டு கொடுக்குறாரு.  என்ன சொல்றாங்கன்னு மீனா கேட்க .. நல்லது நடப்பதற்காக இது மாதிரி பண்றதுல தப்பு இல்ல அப்படின்னு முத்து சொல்றாரு.. இப்போ காலையில ஆனதும் முத்து சொன்ன மாதிரியே குடிச்சிட்டு நடிக்கிறார் மீனாவும் அதுக்கேத்த மாதிரி நடிக்க ஆரம்பிச்சிடுறாங்க இதை பார்த்த சத்யா உண்மைனு  நம்பி முத்துவ திட்ட ஆரம்பிக்கிறாரு.. இது எல்லாத்தையுமே பிரின்ஸ்பால்  பார்த்துட்டு இருக்காரு ..சத்யாவை கூப்பிட்டு விசாரிக்கிறார்.. சார் நாங்க ரொம்ப கஷ்டப்படுற குடும்பம்னு  தன்னோட குடும்பத்தை பத்தி சொல்றாரு. உடனே பிரின்ஸ்பால் சரி நாளையிலிருந்து ஒழுங்கா காலேஜுக்கு வந்துருன்னு சொல்றாரு.. அதோட முத்துவை போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி  அரெஸ்ட் பண்ண வச்சிடுறாரு..

முத்துவை போலீசில் மாட்டி விட்ட பிரின்சிபால் ;

muthu,meena (21) (1)

மீன ஸ்டேஷன்ல போயி  பேசுறாங்க சார் என் தம்பி காலேஜ்ல ஒரு சின்ன பிரச்சனை ஆயிடுச்சு அவனை எப்படியாவது எக்ஸாம் எழுத வைக்கிறதுக்காக நாங்க ரெண்டு பேரும் நடிச்சோம்னு சொல்றாங்க .அதெல்லாம் முடியாது மேடம் வந்ததுக்கப்புறம் பேசிக்கங்க அப்படின்னு மீனாவ வெளியில அனுப்புறாங்க இப்போ சத்யாவும் முத்துவை பார்த்து கைய புடிச்சிட்டு என்னை மன்னிசுருங்க  மாமானு  கண்கலங்கி அழுகுறாரு.. மீனா என்ன பண்றதுன்னு  தெரியாம ஸ்ருதிக்கு கால் பண்ணி  விஷயத்தை சொல்றாங்க.. ஸ்ருதியும் முத்துவை ஏன் அரெஸ்ட் பண்ணுங்கன்னு   ஷாக்கா கேக்குறாங்க அதோட இன்னைக்கு  எபிசோட முடிச்சு இருக்காங்க..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்