மக்களே உஷார்! நகை மோசடியில் ஈடுபட்ட முத்தூட் ஃபினான்ஸ் நிதிநிறுவனம்……

Default Image

நகை மோசடியில் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே முத்தூட் ஃபினான்ஸ் நிதிநிறுவனத்தில் ஈடுபட்ட அதன் மேலாளர், போலீசாருக்கு தெரிந்ததும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

சித்தூர் அருகே வி.கோட்டா பகுதியில் இயங்கிவரும் முத்தூட் ஃபினான்ஸ் நிதி நிறுவனத்தின் மேலாளர் பிரகாஷ், வாடிக்கையாளர்கள் அடகுவைத்த நகைகளைத் திருடி விற்று அதற்கு பதிலாக போலி நகைகளை வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து நிறுவனத்துக்கு சீல் வைத்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

காவல்துறையினர் தம்மை நெருங்குவதை அறிந்த மேலாளர் பிரகாஷ் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரகாஷிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்