நவராத்திரி பூஜையில் கொழு மட்டும் முக்கியமானது கிடையாது அதன் சார்ந்த வழிபாடும் அவசியமான ஒன்றாகும் சுமங்கலி பெண்கள் வீட்டில் கொழு அமைத்து தேவியர்களை பாடி மகிழ்ந்து வணங்குவார்கள்.
unknown nodeநவராத்திரி வழிபாடு சக்தி மகிமையை விளக்கும் மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றையும் வேண்டி அவற்றுக்கு அதிபதிகளான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்று மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே இவ்விரதத்தின் நோக்கமாகும்.
unknown nodeஅதில் சுமங்கலி பெண்கள் 9 நாளும் அன்னைக்கு விரதம் இருந்து வணங்குவார்கள். இந்த விரதத்தை நவராத்திரியின் ஒன்பது நாட்களும் கடைபிடித்து இருப்பவர்கள், விரதத்தோடு அன்னையை பூஜித்த பிறகே உணவருந்தி மெத்தை, பாயில் படுக்காமல் தரையில் விரிப்புகளில் படுக்க வேண்டும்.
unknown nodeமேலும் பிரதமைத் திதியில் ஹஸ்த நட்சத்திரம் சேர்ந்து கூடுமானால் அது மிக உன்னதமான நாளாகும். அந்த நாளில் தேவி தன்னைப் பூஜிப்பவருக்கு வேண்டியவற்றையெல்லாம் கொடுப்பாள் என்று சொல்வார்கள்.முதல் மூன்று நாட்களில் விரதம் தைரியத்தையும் வேண்டி பராசக்தியை வழிபடுதல் வேண்டும். அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி மஹாலட்சுமியை வழிபடவேண்டும். இறுதி மூன்று நாட்களும் கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் என்பவற்றை வேண்டிச் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்.
unknown nodeசுமங்கலிப் பெண்களை இவ்விரத நாட்களில் வீட்டுக்கு அழைத்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமரச் செய்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் என்பவற்றை வழங்குவர்.நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள். தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம்.
unknown nodeகுழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும்.படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், உயர்ந்த நிலையை அடையலாம். ஒன்பது நாட்களும் வழிபட இயலாதவர்கள் அஷ்டமியன்று துர்கையை வழிபட்டு அன்று இரவு விழித்திருந்தால், அவர்களின் வாழ்க்கையை துர்காதேவியானவள் கண்விழித்துக் காப்பாள்.
unknown nodeநவராத்திரி விரதத்தை முறையாகக் கைக்கொள்ள விரும்புவோர் முதலெட்டு நாட்களிலும் பகலில் உணவின்றி இரவில் பூஜை முடித்தபின் பால்பழம், பலகாரம் என்பவற்றை உண்டு, நவமியில் உபவாசமிருந்து பத்தாம் நாள் விஜயதசமியன்று காலை எட்டரை மணிக்கு முன் பாரணை செய்தல் வேண்டும். முடியாதவர்கள் முதலெட்டு நாளிலும் ஒரு நேர உணவுண்டு, கடைசி நாளில் பால் பழம் மட்டும் கொள்ளலாம்.நவராத்திரி அன்று அன்னையை வணங்கி நலன்கள் எல்லாம் பெற்று மகிழ்வோமாக..நலம்…!
DINASUVADU