அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுக்கும் இடையே நடந்து வந்த வார்த்தை யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது.டிரம்பும், கிம் ஜாங் அன்னும் மே மாதம் அல்லது ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தகவல்கள் வெளியாகி வருகின்றன
இது தொடர்பான முன் ஏற்பாடுகளை கவனிப்பதற்கு இரு நாட்டு உயர் அதிகாரிகளும் சந்தித்துப் பேசி உள்ளனர்.கிம் ஜாங் அன்னுடன் பேச்சு நடத்தப்போவது குறித்து டிரம்ப் டுவிட்டரில் நேரடியாக தெரிவித்து விட்டார். ஆனால் கிம் ஜாங் அன் மட்டும் இந்த விஷயத்தில் நேரடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தார்.
நேற்று முன்தினம் பியாங்யாங் நகரில், கிம் ஜாங் அன் தனது கட்சியினருடன் நடத்திய ஆலோசனையின்போது, அமெரிக்காவுடன் நடத்த உள்ள பேச்சுவார்த்தை குறித்து குறிப்பிட்டு விவாதித்து இருக்கிறார். இதை அந்த நாட்டின் அரசு செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. உறுதி செய்து உள்ளது.எனினும் டிரம்புடனான கிம் ஜாங் அன்னின் சந்திப்பு எங்கு, எந்த தேதியில் நடைபெறும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை