#T20 World Cup 2022: டக்வர்த் லூயிஸ் முறைப்படி அயர்லாந்து 5 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி.!
டி-20 உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்து அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் எட்டாவது சீசன் சூப்பர்-12 போட்டியில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பௌலிங் செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அயர்லாந்து அணியில் கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி 62 ரன்கள் குவித்தார் மற்றும் இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் மற்றும் லிவிங்ஸ்டன் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.
158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஆரம்பமே சொதப்பியது. அதன்பிறகு தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 14.3 ஓவர்களில் 105/5 என்ற ரன்களில் விளையாடிக் கொண்டிருக்கும்போது மழை குறுக்கிட்டதால் டக்வர்த் லூயிஸ் விதிப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.