ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாக ரோஜர் பெடரர் அறிவிப்பு..!

Tennis master Roger Federer has announced his withdrawal from the Tokyo Olympics.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாக டென்னிஸ் மாஸ்டர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.

ரசிகர்களுக்கு  ட்விட்டர் மூலம் இந்த தகவலை ரோஜர் பெடரர் தெரிவித்தார். புல்வெளி மைதனாத்தில் விளையாட தனது “முழங்கால்” ஒத்துழைக்காது எனவே டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட வேண்டாம் என்ற முடிவை நான் எடுத்துள்ளேன் என்று கூறினார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் சுவிட்சர்லாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பின்தங்கியிருப்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. எனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது எப்போதுமே எனக்கு பெருமை மற்றும் மரியாதை அளிக்கிறது என்று ரோஜர் பெடரர் கூறியுள்ளார்.

டென்னிஸ் ஜாம்பவான்களான ரோஜர் பெடரர் மற்றும் ரஃபால் நடால் ஆகியோர் 20 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையைப் படைத்துள்ளனர். இந்த சாதனையை நோவக் ஜோகோவிச்  கடந்த ஞாயிற்றுக்கிழமை சமன் செய்தார்.

unknown node