குளு குளுனு மழை...சுட சுட கத்திரிக்காய் பஜ்ஜி.!

Many people like to eat it hot and spicy during the rainy season, so most people like to eat pajji which is usually made with

கீழே கத்திரிக்காய் பஜ்ஜி எப்படி செய்வதென்று செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மழைப் காலத்தின் போது நன்கு சூடாகவும், காரமாகவும் சாப்பிட பலருக்கும் பிடிக்கும். அப்படியென்றால் பெரும்பாலானோர் சாப்பிட விரும்புவது பஜ்ஜியைத் தான். பொதுவாக வாழைக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயத்தை வைத்து தான் பலர் பஜ்ஜி செய்து சாப்பிடுவார்கள். ஆனால் சற்று வித்தியாசமாக  கத்திரிக்காய் கொண்டு பஜ்ஜி செய்து சாப்பிடலாம் பற்றி பார்ப்போமா..?

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் – 5

எண்ணெய் – தேவையான அளவு

கடலை மாவு – 2 கப்

அரிசி மாவு – 1 கப்

பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3  ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

சோடா – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

ஒரு பவுலில் கடலை மாவு, மஞ்சள்தூள், அரிசிமாவு, மிளகாய் த்தூள் சமயல் சோட, பெருங்காயம், உப்பு சேர்த்து, தேவையான தண்ணி சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக்கவும்.

பின்பு கத்திரிக்காயை நீளமாகவோ அல்லது வட்டமாகவோ வெட்டிக் கொள்ளுங்கள். வாணலியில் வைத்து எண்ணெய் சூடானதும், மிதமான சூட்டில் நறுக்கி வைத்திருந்த கத்திரிக்காயை மாவில் முக்கி எண்ணெயில் போட்டு நன்கு வேக வைத்து வாழக்காய் பஜ்ஜி போல் பொரித்தெடுக்கவும்.

இப்போது, ரொம்ப சுவையாக இருக்கும் கத்திரிக்காய் பஜ்ஜி ரெடி…தொட்டு கொள்ள  டொமட்டோ சாஸுடன் சாப்பிடவும்.