சொந்த மண்ணில் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கிய தோனி ..!

இந்தியா ,தென்னாபிரிக்கா இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் இறங்கிய இந்திய அணி 497 ரன்கள் எடுத்தது.இதை தொடர்ந்து

இந்தியா ,தென்னாபிரிக்கா இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் இறங்கிய இந்திய அணி 497 ரன்கள் எடுத்தது.இதை தொடர்ந்து இறங்கிய தென்னாபிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 162 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.இந்திய அணி 335 ரன்கள் முன்னிலையில் இருந்ததால் ஃபாலோ ஆன் கொடுக்கப்பட்டது.இதை அடுத்து இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி 133 ரன்னில் விக்கெட் அனைத்தையும் இழந்தது.இதனால் இந்திய அணி 202 ரன்கள் மற்றும் இன்னிங்ஸை கைப்பற்றியது.

unknown node

இப்போட்டி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சொந்த ஊரில் நடைபெற்றதால் போட்டி முடிந்த பிறகு ஓய்வு அறையில் தோனி சக வீரர்களை சந்தித்தார். மேலும் தோனி சில வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.இந்த புகைப்படத்தை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது.தோனி உடன் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகைப்படம் எடுத்து கொண்டார்.ரவி சாஸ்திரி பதிவிட்ட ஒரு பதிவில் “சிறப்பான வெற்றிக்கு பிறகு  இந்தியாவின் உண்மையான ஜாம்பவானை அவரின் சொந்த இடத்திலே பார்த்தது மகிழ்ச்சி என பதிவிட்டு இருந்தார்.