வதந்தி , பொய்யான செய்திகளை புகார் தெரிவிக்க இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்

இன்றைய நவீன காலகட்டத்தில் கோடிக்கணக்கான பயனாளர்கள் பேஸ்புக் ,ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் சினிமா

இன்றைய நவீன காலகட்டத்தில் கோடிக்கணக்கான பயனாளர்கள் பேஸ்புக் ,ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் சினிமா  பிரபலங்கள்  புகைப்படங்களை அதிகமாக பதிவிடும் வலைத்தளமாக இன்ஸ்டாகிராம் தற்போது இருந்து வருகிறது.

unknown node

இந்த இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மற்றும் சிறு விடீயோக்களை பகிந்து கொள்ளும் வசதி உள்ளது. இன்ஸ்டாகிராமை  பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கிய பிறகு புதிய அப்டேட்களை செய்து வருகிறது.

இந்நிலையில் சமூக வலைதளங்களின் மூலம் பொய்யான செய்தி அல்லது வதந்திகள் பரப்புவதாக குற்றச்சாட்டு வந்தால் அதை தடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் பகிரப்படும் ஒரு செய்தி பொய்யான நினைத்தால் அதனை பயனாளர்கள் இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு தெரியப்படுத்தும் புதிய வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி  உள்ளது.