பேரறிவாளனின் விடுதலையை கொண்டாடுபவர்கள் வக்கிரபுத்தி கொண்டவர்கள் – புதுச்சேரி முன்னாள் முதல்வர்

பேரறிவாளனின் விடுதலையை கொண்டாடுபவர்கள் வக்கிரபுத்தி கொண்டவர்கள் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சனம்.  புதுச்சேரி முன்னாள் முதலவர் நாராயணசாமி அவர்கள், பேரறிவாளன் விடுதலை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ராஜீவ் காந்தி கொலையாளிகளை அவரது குடும்பத்தார் மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் என்றும், பேரறிவாளன் விடுதலையை இனிப்பு வழங்கி பட்டாசு வெடிப்பது தங்களுக்கு மன வேதனை அளிப்பதாகவும், முன்னாள் பிரதமரை கொன்றவர்கள்  விடுதலையை கொண்டாடுவது அவர்களின் வக்கிரபுத்தியைக் காட்டுகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார். … Read more

காங்கிரஸ் – திமுக கூட்டணி பலம் 14ஆக குறைவு – புதுச்சேரி நாராயணசாமி அரசுக்கு ஆபத்து?

நான்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால் புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்த்துவை பேரவையில் சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தார் ஜான்குமார். இதனிடையே, முதல்வர் நாராயணசாமி போட்டியிடுவதற்காக நெல்லித்தோப்பு தொகுதியை 2016ல் விட்டுக் கொடுத்தவர் ஜான்குமார் என்பது குறிப்பிடப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதுச்சேரியில் இதுவரை நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி, கிருஷ்ணராவ், … Read more

அவர் எங்கே போட்டியிடுகிறாரோ நான் அங்க எதிர்த்து நிற்கிறேன் – நமச்சிவாயம் சவால்

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போட்டியிடும் தொகுதியில் நானும் போட்டியிட தயார் என நமச்சிவயம் சவால் விடுத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் நீக்கம் செய்யப்படுகிறார் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம் அறிவித்திருந்தார். கட்சிக்கு துரோகம் இழைத்ததால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் நமச்சிவாயம். புதுச்சேரி ஆளுநரை நேரில் சந்தித்து அதற்கான கடிதத்தை வழங்கினார். … Read more

அங்கு சென்றால் காணாமல் போய்விடுவார்கள் – நாராயணசாமி

புதுச்சேரியோ, தமிழகமோ பாஜகவில் சேருபவர்கள் காணாமல் தான் போய் விடுவார்கள் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்ற நிலையில் தான் நான் செயல்பட்டு வருகிறேன். ராஜினாமா செய்தவர்களின் சரித்திரம் பற்றி புதுச்சேரி மக்களுக்கு நன்றாக தெரியும். தேர்தல் நெருங்கும்போது இதுபோன்று நடக்கும். அதையும் சமாளித்து காங்கிரஸ் தேர்தலை சந்திக்கும் என்று கூறியுள்ளார். இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து அமைச்சர் … Read more

பிரதமர் மோடி ஏன் இரட்டை வேடம் போடுகிறார்? – நாராயணசாமி

உள்ளாட்சி தேர்தல் குறித்து கேள்வி எழுப்பிருந்த நிலையில், பிரதமர் மோடியிடம் வாதிட தயார் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் இன்று காணொலி வாயிலாக ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத் திட்டத்தை (மருத்துவ காப்பீடு) திட்டத்தை தொடங்கி வைத்த பின் பேசிய பிரதமர் மோடி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் ஏன் நடத்தவில்லை. ஜனநாயகம் குறித்து பாடம் எடுப்போர்தான் புதுச்சேரியில் ஆட்சி செய்கின்றனர். புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளாட்சி … Read more

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது ஏன்? – பிரதமர் மோடி

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் அனைத்து மக்களையும் சென்றடையும் விதமாக, ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத் திட்டத்தை (மருத்துவ காப்பீடு) பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதனையடுத்து பேசிய பிரதமர் மோடி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் ஏன் … Read more

கல்லூரி சேர்க்கைக்கு புதிய சான்றிதழ் தேவையில்லை! புதுச்சேரி முதல்வர் அதிரடி!

கல்லூரியில் சேர புதிய சான்றிதழ் அவசியம் இல்லை. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கடந்த சில மாதங்களாகவே மூடப்பட்டுள்ள உள்ளது. இந்நிலையில், தற்போது, கல்லூரியில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி அவர்கள், ‘ கல்லூரியில் சேர புதிய … Read more

பெரியார் சிலையை அவமதித்தது கோழைத்தனம்! -புதுச்சேரி முதல்வர்

பெரியார் சிலையை அவமதித்தது கோழைத்தனமான செயல். கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்தததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த செயலை கண்டித்து, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் இதுகுறித்து கூறுகையில், பெரியார் சிலையை அவமதித்தது கோழைத்தனமான செயல் என்றும், அவர் சுயமரியாதை இயக்கத்தின் சின்னம் என்றும், உலகம் இருக்கும் வரை பெரியாரின் சீர்திருத்த போதனைகள் நினைவு கூறப்படும் என்றும் … Read more

நிபுணர் குழுவை அனுப்புங்கள் – நாராயணசாமி கடிதம்

ஊரடங்கால் மாநில அரசுகள் இழந்த பொருளாதாரத்தை மத்திய அரசுதான் ஈடுகட்ட வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் கடிதம்.  கொரோனா என்ற கொடிய நோயால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை மேம்படுத்த மாநிலங்களுக்கு உடனடியாக நிபுணர் குழுவை அனுப்பக்கோரி மத்திய அரசுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் அனுப்பியுள்ளார். அதில், மாநிலங்களில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து உதவ வேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த ஊரடங்கால் மாநில அரசுகள் இழந்த பொருளாதாரத்தை மத்திய அரசுதான் ஈடுகட்ட வேண்டும் … Read more

தெருவில் இறங்கி கிருமி நாசினி தெளித்த புதுச்சேரி முதல்வர்.!

இந்தியாவில் கொரோனா வைரசால் 979 பேர் பாதிக்கப்பட்டு, 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 86 பேர் குணமடைந்துள்ளர்கள் என மத்திய சுகதர்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒரு பலியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மத்திய மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைகள் எடுத்து வருகிறது. இதன்படி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா வைரைஸை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து … Read more