சௌமியா விஸ்நாதன் (25 வயது) என்பவர் பிரபல ஆங்கில தொலைக்காட்சியான இந்தியா டுடேவில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று காலை 3:30 மணியளவில் சௌமியா தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சில மர்ம நபர்கள் சௌமியாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர். இந்த கொடூர கொலை சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். […]
தமிழகத்தில் பத்திரிக்கையாளர் குடும்ப நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில், அதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. இதுகுறித்த அரசாணையில், தமிழ்நாட்டிலுள்ள பத்திரிகைத் துறையினர் நலன் கருதி, பத்திரிகைத் துறையில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் பிழை திருத்துபவர்கள் ஆகியோர் பணியிலிருக்கும் போது இயற்கை எய்தினால் அவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, குடும்ப உதவி நிதியாக ரூ.25.000, ரூ.40,000 ரூ.50,000,ரூ.2,00.000 என வழங்கப்பட்டு ஆணைகள் […]
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும்,மூத்த பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும்,மூத்த பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று நள்ளிரவு காலமானார். இவரது மறைவுக்கு, மாநிலங்களவை எம்பி ஸ்வபன் தாஸ்குப்தா போன்ற தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடி அவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஸ்ரீ சந்தன் மித்ரா ஜி புத்திசாலித்தனம் மற்றும் நுண்ணறிவு கொண்டவர். இவர், அரசியல் […]
முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யும்,மூத்த பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா நள்ளிரவு காலமானார். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும்,மூத்த பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா புதன்கிழமை(நேற்று) நள்ளிரவு காலமானார்.அவருக்கு வயது 66.இதனை, அவரது மகன் குஷன் மித்ரா செய்தி நிறுவனமான ஏஎன்ஐக்கு தெரிவித்துள்ளார். Former Rajya Sabha MP and senior journalist Chandan Mitra passed away late last night in Delhi, confirms his son Kushan Mitra. (File photo) pic.twitter.com/MB7wlwL9Hi — ANI (@ANI) September […]
கொரோனாவால் உயிரிழக்கக் கூடிய பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடிய முன்களப் பணியாளர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு மாநிலங்களிலும் நிவாரணம் அளிக்கப்பட்ட வண்ணம் உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்திலும் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான முழு பொறுப்பையும் அம்மாநில அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில், […]
போபால் விஷவாயு சம்பவம் குறித்து முன்பே எச்சரித்த மூத்த பத்திரிகையாளர் ராஜ்குமார் கேஸ்வானி கொரோனாவால் உயிரிழந்தார். ராஜ்குமார் கேஸ்வானி நியூயார்க் டைம்ஸ், என்.டி.டி.வி., டைனிக் பாஸ்கர், தி இல்லஸ்ட்ராடெட் வீக்லி ஆப் இந்தியா, ஞாயிறு, இந்தியா டுடே மற்றும் தி வீக் போன்ற முக்கிய பத்திரிகை நிறுவனங்களுடன் பணியாற்றியுள்ளார். உலகின் மிக மோசமான போபால் விஷவாயு கசிவு 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2-3 ஆம் தேதிகளில் இரவில் நடந்தது. ஆனால், இந்த சம்பவம் குறித்து மூத்த […]
சக பெண் ஊழியரை பாலியல் செய்ததாக கூறிய வழக்கில் இருந்து தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் இன்று விடுதலை ஆகியுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டில் கோவா கருத்தரங்கில் பங்கேற்ற தருண் தேஜ்பால் அங்கிருந்த நட்சத்திர ஓட்டலில் தன்னுடன் இருந்த சக பெண் ஊழியரை லிப்டில் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி அவர் மீது அந்த பெண் வழக்கு தொடந்தார். இதனால் இவர் மீது கோவா போலீஸ் எப்.ஐ.ஆர். பதிவு செய்தது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக […]
சீனாவின் அரசு ரகசியங்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு பகிரப்பட்டதால், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவரை சீனாவில் கைது செய்துள்ளனர். செங் லீ எனும் தற்போதைய ஆஸ்திரேலிய பத்திரிகையாளராக பணியாற்றிய பெண்மணி சீனாவின் ஹூனான் மாகாணத்தில் பிறந்தவர். ஆனால் தனது சிறுவயதிலேயே ஆஸ்திரேலியாவுக்கு குடிப்பெயர்ந்ததால் ஆஸ்திரேலியக் குடியுரிமையும் பெற்றவராக இருந்துள்ளார். அதன்பின் 2012 ஆம் ஆண்டு சீனாவில் இயங்கி வரக்கூடிய சர்வதேச ஆங்கில தொலைக்காட்சி சேனலில் பத்திரிக்கையாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், சீனாவின் அரசு ரகசியம் வெளிநாடுகளுக்கு பகிரப்பட்டு வருவதாக […]
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற மாவட்ட தேர்தலின் போது 3 தொலைக்காட்சி பத்திரிக்கையாளர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தல்கள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், சம்பவ இடத்திற்கு தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் பலர் சென்று அங்கு நடந்த தகவல்களை சேமித்து உள்ளனர். அப்பொழுது செய்திகளை சேகரித்துக் கொண்டிருந்த 3 பத்திரிகையாளர்களை காவல்துறையினர் தாக்கியதாகவும், செய்திகளை சேகரிக்க கூடாது என தடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பத்திரிகை நிருபர்களின் உபகரணங்கள் […]
ஆப்கனிஸ்தானில் பத்திரிகையாளர் மற்றும் ஓட்டுநர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். ஆப்கனிஸ்தானில் உள்ள ஜலாலாபாத்தில் அரபனோ கேலே எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய தொலைக்காட்சி பத்திரிகையாளர் ஒருவர் தனது காரில் டிரைவருடன் வேலைக்கு சென்றுகொண்டிருந்துள்ளார். அப்பொழுது இவர் சென்றுகொண்டிருந்த காரின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில்பெண் பத்திரிகையாளரும் , ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த கொலைக்கு பின்னல் தங்களது குழு இல்லை என தலிபான் தீவிரவாத அமைப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
அதிகார வர்க்கத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து மக்களின் பக்கம் அறத்தோடு நிற்கும் ஊடகவியலாளர்களின் பெரும்பணி சிறக்கட்டும் என்று சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களாட்சியின் மாண்பினை தாங்கிப்பிடிக்கும் நான்கு தூண்களில் முக்கியமானதாகவும், முதன்மையானதாகவும் விளங்குகின்ற ஊடகத்துறையில் அறவுணர்வோடும், அர்ப்பணிப்புணர்வோடும், பணிபுரியும் அச்சு மற்றும் மின் ஊடகத்துறையினருக்கு ஊடக நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அந்த வகையில், இயற்கைப்பேரிடர்களின்போதும், எதிர்பாராத விபத்துகளின் போதும் தன்னலம் கருதாது, இரவுப்பகல் பாராது செய்திகளைக் கொண்டு சேர்க்கும் […]
பல பத்திரிகைகள் மற்றும் ஊடங்களில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில் பொறுப்பாசிரியராக இருந்தவர், பத்திரிகையாளர் சுதாங்கன். இவர் தினமணி நாளேடு, தமிழன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நாளிதழ்களில் பொறுப்பாசிரியராக பணியாற்றி வந்தார். அதுமட்டுமின்றி, பல தொலைக்காட்சிகளிழும் அவர் பணியாற்றி வந்தார். இவருக்கு உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் […]
பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் தத்யால் எனும் நகரில் பாகிஸ்தான் கொடியை அகற்றிய பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். காஷ்மீரில் தத்யால் எனும் நகர் பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அதன் பொது இடத்தில் பாகிஸ்தான் நாட்டின் தேசியக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இதற்கு சமூக ஆர்வலரும் பத்திரிகையாளரும் ஆகிய தன்வீர் அகமது என்பவர் கடந்த சில நாட்களாகவே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். மேலும் அந்த கொடியை அகற்ற வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்து இருந்ததுடன், உண்ணாவிரதம் இருந்தும் அவர் போராட்டம் நடத்தியுள்ளார். […]
நாகையில் கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர் ஜான் கென்னடி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி தமிழக அரசு அறிவிப்பு. தனியார் டிவியில் நாகை மாவட்ட செய்தியாளராக பணியாற்றிய ஜான் கென்னடி கடந்த 10ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 1ம் தேதி இரவு உயிரிழந்தார். இந்நிலையில் இறந்த பத்திரிகையாளர் ஜான் கென்னடி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன் தொடர்பான அறிக்கையில், […]
ஊடகவியலாளர்களுக்கு எதிராக மிரட்டல் விடுபவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் ட்வீட். ஊடகவியலாளர்களுக்கு எதிராக மிரட்டல் விடுபவர்களுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில், அதிரடியான ஒரு பதிவினை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், ‘எங்க ஜி பத்தி மட்டும்தான் பேசணும். எதிர்க்கருத்து-இடையூறு இல்லாம பேசணும். கத்திகத்தி பேசணும். வேதனையை சாதனைனு பேசணும். அந்துபோன ரீலை ரியல்னு பேசணும். மொத்தத்துல 24 மணிநேரமும் பேசணும்.’ ‘அதுக்கு நீ நேர்லதான் பேசணும். எதுக்கு விவாதத்துக்கு வர்ற!’ என பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் வசித்து வரும் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு அங்குள்ள எய்ம்ஸ் மையத்தில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் மருத்துவமனை கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து, மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், மருத்துவமனை […]
உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தின் கங்ககாட் பகுதிக்கு அருகே மணி திரிபாதி (25) என்ற பத்திரிகையாளர் தனது நண்பருடன் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டனர். இதைத்தொடர்ந்து, இவரது நண்பர் கான்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அழைத்து சென்றார். ஆனால், மணி திரிபாதியை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். திரிபாதி கம்பு மெயில் என்ற செய்தித்தாளில் வேலை செய்து வந்துள்ளார். திரிபாதி கடந்த 14 -ம் தேதி அன்று தனது […]
சென்னையில் இன்று இரண்டு செய்தியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், இன்று ஒரே நாளில் 105 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், தமிழகத்தில் இன்று 46 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்து உள்ளது. சென்னை தமிழகத்தில் அதிகம் பாதித்த மாவட்டமாக உள்ளது. சென்னையில், இதுவரை 285 […]
டெல்லியில் நேற்று மாலை குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதுவரை இந்த சம்பவத்தால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.வன்முறை குறித்த செய்திகளை சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வடகிழக்கு டெல்லியில் வன்முறை குறித்த ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர் இடையில் செய்திகளை சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. காயமடைந்த இரண்டு செய்தியாளர்களும் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல […]
அமெரிக்காவில் கெண்டகி பகுதியில் தற்போது திருவிழா நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பிரபல தனியார் ஊடகத்தை சார்ந்த ரிவெஸ்ட் என்ற பெண் ஊடகவியலாளர் படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். அப்போது ரிவெஸ்ட் நேரலையில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு மர்ம நபர் ரிவெஸ்ட் கண்ணத்தில் முத்தமிட்டு சென்றுவிட்டார். இதை எப்படியோ ரிவெஸ்ட் சமாளித்துக் கொண்டு நேரலை முடித்தார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பலர் கிண்டல் அடித்தனர்.மேலும் ரிவெஸ்ட் சம்பவத்தை அவர் மீண்டும் மீண்டும் பார்த்தால் எரிச்சல் அடைந்தார். அந்த […]