ஐபிஎல் மெகா ஏலம் எப்போது? வெளியான புதிய தகவல் என்ன?

நடைபெற போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவம்பர்-24 மற்றும் 25-ம் தேதிகளில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPL Auction

சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு தான் தற்போது ரசிகர்களிடையே இருந்து வரும் பெரிய எதிர்பார்ப்பாகும். சமீபத்தில், பிசிசிஐ இந்த மெகா ஏலத்திற்கான விதிமுறைகளை வெளியிட்டிருந்தது. அது ஒரு சில அணிகளுக்கு முரண் பாடாக அமைந்துள்ளதால் பிசிசிஐக்கு கடிதம் எழுதியதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

ஆனால், அதற்கு பிசிசிஐ அந்த விதிகளில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை எனவும் கூரப்பட்டது. மேலும், வெளியான அந்த விதிகளில் ஒரு அணி 6 வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. அதுதான், இப்போது ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் உச்சமாக இருந்து வருகிறது.

அதன்படி, வரும் அக்.-31 ம் தேதி 10 ஐபிஎல் அணிகளும் எந்த வீரர்களைத் தக்கவைக்க உள்ளனர் என்ற பட்டியலை வெளியிட வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் ஐபிஎல் அணிகள் தற்போது இருந்து வருகிறது. இந்த நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்திற்கான தேதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, வரும் நவம்பர்- 24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் உள்ள ரியாத் நகரில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், நவம்பர்-22 முதல் நவம்பர்-26ம் வரை பகல் நேரத்தில் இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடக்க இருக்கிறது.

இதனால், பார்வையாளர்களுக்கு எந்த இடையூறுமின்றி நடைபெற வேண்டும் என்பதற்காக அன்றைய தினம் ( நவம்பர்- 24,25) மாலை மற்றும் இரவு நேரத்தில் இந்த மெகா ஏலம் நடைபெறும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவலை விரைவில் பிசிசிஐ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்