ரோஹித் சர்மாவுடன் பிரச்சனையா? விளக்கம் கொடுத்த சுப்மன் கில்!

rohit sharma

சுப்மன் கில் : ரோஹித் ஷர்மாவுடன் பிரச்சனை என்ற தகவல் பரவிய நிலையில், அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியீட்டு சுப்மன் கில் விளக்கம் கொடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் மாற்று வீரர்களால் ஒருவராக இடம்பெற்றுள்ள சுப்மன் கில் ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக இந்தியாவுக்கு திரும்ப இருப்பதாக சமீபத்தில் விமர்சனங்கள் எழுந்தது.

அது மட்டுமின்றி, சுப்மன் கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேப்டன் ரோஹித் ஷர்மாவை பாலோவ் செய்து இருந்த நிலையில், விமர்சனங்கள் எழுந்தவுடன் அன்பாலோவ் செய்துவிட்டதாகவும் புதிய பிரச்சனை வெடிக்க தொடங்கியது. இதனையடுத்து, ரோஹித் ரசிகர்கள் சுப்மன் கில்லை திட்டு சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியீட்டு வந்தனர். நெட்டிசன்கள் பலரும் இந்திய கேப்டனை பலோவ் செய்யவில்லையா என்பது போல கேள்விகளை எழுப்ப தொடங்கினர்.

ரோஹித் ஷர்மாவை கில் அன்ஃபாலோவ் செய்த பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் செய்திகள் பரவ தொடங்கியது. உண்மை என்னவென்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், இவை அனைத்திற்கும் விளக்கம் கொடுக்கும் விதமாக சுப்மன் கில் ரோஹித் ஷர்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரோஹித் ஷர்மாவுடன் தனியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும், ரோகித் சர்மா மற்றும் அவரது மகள் சமைராவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட இரண்டு புகைப்படத்தையும் பகிர்ந்த சுப்மன் கில் ” ரோகித் சர்மாவிடம் இருந்து நானும் சமைராவும் ஒழுக்கத்தை எப்படி கற்று கொள்வது என்பதை கற்று வருகிறோம் ” என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இவர்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்