யுவராஜ், லாராவுக்கு நன்றி… வெற்றிக்கு பிறகு அபிஷேக் ஷர்மா கூறியது என்ன?

Abhishek Sharma

ஐபிஎல் 2024: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற அபிஷேக் ஷர்மா யுவராஜ், லாராவுக்கு நன்றி தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரை நேற்றைய போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியும், ருத்ராஜ் தலைமையிலான சென்னை அணியும் மோதியது. ஹைதராபாத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.

இதன்பின் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹைதராபாத் அணியின் பந்து வீச்சளர்கள் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.

அதுமட்டுமில்லாமல், அதிரடியாக விளையாடிய ஐதராபாத் அணியின் வீரர் அபிஷேக் ஷர்மா 12 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தனர். இவர் தான் இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன்பின் அபிஷேக் ஷர்மா கூறியதாவது, முதலில் பந்துவீச வந்தபோதே பிட்ச் மெதுவாக இருந்ததை நாங்கள் உணர்ந்தோம்.

இதனால் முதல் 6 ஓவரில் அதாவது பவர் பிளேவில் அதிரடியாக விளையாடினால் போட்டியை எங்கள் பக்கம் கொண்டுவந்துவிடலாம் என தெரியும். இதன் காரணமாகவே நான் சற்று அதிரடியாக விளையாடினேன். இதற்கான எனது அப்பா, யுவராஜ் சிங் மற்றும் பிரையன் லாரா ஆகியோருக்கு ஸ்பெஷல் நன்றி தெரிவிக்கிறேன். இந்த போட்டியின் மூலம் எங்களுக்கு ஒரு நல்ல அனுபவமும் கிடைத்தது என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 26032025
Today Live - 25032024
Edappadi Palanisamy
ramandeep singh yuvraj singh
LPG Lorry Strike
thambi ramaiah manoj bharathiraja
shreyas iyer and rohit
US President Donald Trump