ஹிட் மேனுக்காக விக்கெட்டை தியாகம் செய்த சூர்யகுமார் யாதவ்..!

Default Image

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று மும்பை அணியும் டெல்லி அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற  முதலில் களமிறங்கிய டெல்லி அணி 156 ரன்கள் எடுத்தன. இதைத்தொடர்ந்து இறங்கிய மும்பை அணி 18.4 ஓவரில் 157 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

இப்போட்டிகளில், மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவுக்கும், குயின்டன் டி காக் தொடக்க வீரர்களாக இறங்கினர்.  ஆட்டம் தொடக்கத்திலே குயின்டன் டி காக் 20 ரன்னில் வெளியேறிய பின்னர் சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். இதனால்,  ரோஹித் ,  சூர்யகுமார் யாதவ் இருவரும் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடினர். இப்போட்டியில் 11-வது ஓவரை அஸ்வின் வீசினார் .

அப்போது, சிங்கிள் எடுக்க ரோகித் சர்மா முயற்சி செய்தார். ஆனால் சூர்யகுமார் யாதவ்  நோ சொல்ல அதற்குள் கீரிஸை விட்டு ரோஹித் வெளியே வந்ததால் தனது விக்கெட்டை சூர்யகுமார் யாதவ் தியாகம் செய்தார்.

ஒருவேளை எதிரில் நின்ற சூர்யகுமார் யாதவ் கீரிஸை விட்டு வெளியே வராமல் இருந்திருந்தால் ரோகித் சர்மா அவுட் ஆகியிருப்பார். நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா  68 ரன்கள் குவித்தார்.  சூர்யகுமார் யாதவ் அவுட் ஆனபோது ரோகித் சர்மா 47 ரன் அடித்தது இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்