தந்தையை போல் மகன்.. அறிமுக போட்டியில் சதம் அடித்து அசத்திய அர்ஜுன் டெண்டுல்கர்!

Default Image

ராஜஸ்தானுக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் சதம் அடித்து அசத்தல்.

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான ரஞ்சிக்கோப்பை தொடரானது இந்த ஆண்டு 2022-2023 ஆம் ஆண்டு சீசன் நேற்று தொடங்கியது. நேற்று போட்டியில் கோவா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த ரஞ்சித் தொடரில் மும்பை அணியில் இருந்து விலகிய முன்னாள் இந்திய வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் கோவா அணிக்காக விளையாடினார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோவா அணி தொடக்கத்தில் தடுமாறி வந்த நிலையில், சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதுமட்டுமில்லாமல், தனது அறிமுக போட்டியில் அசத்தலான சத்தத்தையும் பதிவு செய்தார்.

1998-ஆம் ஆண்டு தன்னுடைய முதல் ரஞ்சி போட்டியில் சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்ததது போல, 34 ஆண்டுகளுக்கு பிறகு கோவா அணிக்காக களமிறங்கிய அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தன்னுடைய அறிமுக போட்டியில் சதம் அடித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்