#SAvIND: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு!

Default Image

தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு. 

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதலில் இரு அணிகளுக்கும் இடையில் டெஸ்ட் தொடர் இன்று தொடங்குகிறது.

அதன்படி, சூப்பர் ஸ்போர்ட் பார்க், செஞ்சுரியன் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணி (பிளேயிங் லெவன்): கே.எல் ராகுல், மயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி(கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தென்னாப்பிரிக்கா அணி (பிளேயிங் லெவன்): டீன் எல்கர் (கேப்டன்), ஐடன் மார்க்ரம், கீகன் பீட்டர்சன், ரஸ்ஸி வான் டெர் டுசென், டெம்பா பவுமா, குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்