#BREAKING: ராஜஸ்தான் ராயல்ஸ் பீல்டிங் பயிற்சியாளர் டிஷாந்த் யாக்னிக்கு கொரோனா தொற்று உறுதி.!

Default Image

ராஜஸ்தான் ராயல்ஸின் பீல்டிங் பயிற்சியாளர் டிஷாந்த் யாக்னிக் கொரோனா.

ராஜஸ்தான் ராயல்ஸின் பீல்டிங் பயிற்சியாளர் டிஷாந்த் யாக்னிக் கொரோனா சோதனை மேற்கொண்டதில் கொரோனா இருப்பது உறுதியானது . அதை  உறுதிப்படுத்தும் வகையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இந்தியன் பிரீமியர் லீக்கின் 13 வது போட்டி செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விமானம் செல்வதற்காக குழு உறுப்பினர்கள் அடுத்த வாரம் மும்பையில் கூடியிருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் யாக்னிக் தற்போது தனது சொந்த ஊரான உதய்பூரில் உள்ளார். மேலும் 14 நாள் தனிமைப்படுத்தலுக்காக ஒரு மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்