#PAKvSL: குசல் மெண்டிஸ், சமரவிக்ரமா அதிரடியான சதம்! பாகிஸ்தானுக்கு 345 ரன்கள் இலக்கு!

PAKvSL

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று காலை 10:30 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகிறது. இதுபோன்று, இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய 2வது போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணியும் விளையாடி வருகின்றனர். இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரரான நிஸ்ஸங்கா மற்றும் குசல் பெரேரா களமிறங்கினர். இதில், குசல் பெரேரா எதிர்பாக்காத விதமாக டக் அவுட்டானார்.

இதன்பின் நிஸ்ஸங்கா மற்றும் குசல் மெண்டிஸ் ஜோடி விக்கெட்டை இழக்காமல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் நிஸ்ஸங்கா 51 எடுத்திருந்த நிலையில், ஷதாப் கான் பந்தில் விக்கெட்டை இழந்தார். மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த குசல் மெண்டிஸ் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை தொம்சம் செய்து தனது சத்தை அடித்து அசத்தினார். பின்னர் 77 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

இதனைத்தொடர்ந்து, மற்ற வீரர்கள் ஒருபக்கம் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் களத்தில் இருந்த சதீர சமரவிக்ரமா 82 பந்துகளில் சதம் அடித்தார். இறுதிக்கட்டத்தில் சதீர சமரவிக்ரமா 108 ரன்களில் ஹசன் அலி ஓவரில் விக்கெட்டை இழந்தார். இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் பந்துவீச்சை பொறுத்தவரையில், அதிகபட்சமாக ஹசன் அலி 4, ஹரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். எனவே, 345 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறக்கவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்