2-வது அரை இறுதிக்கு ரிசர்வ் நாள் கிடையாது..! மழை பெய்தால் இந்தியா அணிக்கு என்ன ஆகும் தெரியுமா?

T20 Worldcup 2024 , 2nd Semifinal

டி20 உலகக்கோப்பை: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் நாளை அரை இறுதி போட்டியானது தொடங்க இருக்கிறது. இதில் முதல் அரை இறுதி போட்டியாக ஆப்கானிஸ்தான் அணியும், தென்னாபிரிக்கா அணியும் மோதவுள்ளது.

அதே போல் அடுத்த நாள் அதாவது நாளை மறுநாள் (ஜூன்-27) இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் 2-வது அரை இறுதி போட்டியில் விளையாடவுள்ளனர். முதல் அரை இறுதி போட்டியானது ஒரு வேளை மழை காரணமாக தடைபெற்று நடக்காமல் போனால் ரிசர்வ் நாளான மறுநாள் (ஜூன்-27)  இந்த போட்டியானது நடத்தப்படும்.

தற்போது, வெளியான தகவலின்படி கயானாவில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாட இருக்கும் 2-ஆம் அரை இறுதி போட்டியில் மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக  தெரியவந்துள்ளது. ஒரு வேளை 2-வது அரை இறுதியில் மழை பெய்து ஆட்டம் தடைபட்டால் இந்த 2-வது அரை இறுதி போட்டிக்கு ரிசர்வ் நாளை ஐசிசி அறிவிக்கவில்லை.

மேலும், இறுதி போட்டிக்கு அடுத்து ஒருநாள் மட்டுமே பயிற்சி செய்ய இருப்பதன் காரணமாக இந்த போட்டிக்கு ரிசர்வ் நாளை ஒதுக்கவில்லை. இதன் காரணமாக அந்த போட்டியானது நடைபெறுமால் இருந்தால் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விடுவார்கள்.

அதற்கு காரணம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றிலும், லீக் சுற்றிலும் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்து இருந்ததன் காரணமாக இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Bomb threat in EPS house at chennai
Pakistan Minister Khawaja asif
AR Rahman
TN Minister Palanivel Thiyagarajan say about TN Internet
RN Ravi
PahalgamTerroristAttack