பேட்டிங்கில் சொதப்பிய நியூசிலாந்து அணி ..!இந்திய அணிக்கு 133 ரன்கள் இலக்கு

Default Image
  • இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையே 2-வது டி -20  போட்டி நடைபெற்று வருகிறது.
  • இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 132 ரன்கள் அடித்துள்ளது.  

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டி -20  போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து  அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி நியூசிலாந்து அணி முதலில் தனது பேட்டிங்கை தொடங்கியது.தொடக்க ஆட்டக்காரர்களாக கப்டில் மற்றும் முன்ரோ  ஆகியோர் களமிறங்கினார்கள்.இந்த ஜோடி ஓரளவு நியூசிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.இந்த சமயத்தில் கப்தில் 33 ரன்களில் வெளியேறினார்.இவருக்கு பின்னால் முன்ரோவும் 26 ரன்களில் வெளியேறினார். இந்த ஜோடி சென்றவுடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன்,கிராண்ட் ஹோம் மற்றும் டெய்லர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். வில்லியம்சன் 14 ரன்கள் ,கிராண்ட் ஹோம் 3 ரன்கள்,டெய்லர் 18 ரன்கள் எடுத்தனர்.

பின்பு  களமிறங்கிய செய்பெர்ட் ஒரளவு தாக்குப்பிடித்து 33 ரன்கள் அடித்தார். இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் செய்பெர்ட்  33*,சட்னர் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் ஜடேஜா 2 விக்கெட்டுகள்,பூம்ரா ,தாகூர்,துபே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்..இதனையடுத்து 133 ரன்கள் அடித்தால் வென்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்