‘என் அப்பாக்கு மனநிலை சரியில்லை’! வேதனைப்பட்ட யுவராஜ் சிங்!!

யுவராஜ் சிங் அவரது தந்தையை குறித்து பேசிய வீடியோ தற்போது தோனி ரசிகர்களால் வைரலாக்கபட்டு வருகிறது.

Yuvraj - Yograj Singh

சென்னை : கடந்த 2007 மற்றும் 2011 ஆண்டுகளில் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக யுவராஜ் சிங் அமைந்திருப்பார். அதிலும், 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு யுவராஜ் சிங் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் இந்திய அணிக்காக விளையாடியிருப்பார்.

ஆனால், 2011-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு அவரது புற்று நோய் ஒரு காரணமாக இருந்தாலும் மறுபக்கம் இளம் வீரர்களின் எழுச்சியும் ஒரு காரணமாக அமைந்தது. ஆனால், யுவராஜ் சிங் அணியில் இடம் பெறாமல் போனதற்கு தோனி தான் காரணம் என யுவராஜின் தந்தை அப்போது தாக்கி பேசி இருந்தார்.

இதை தொடர்ந்து சமீபத்தில் கூட தோனியை குறித்து அவதூறாக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதில், தோனியால் தான் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை அழிந்துவிட்டது என்றும், தோனியை நான் மன்னிக்கவே மாட்டேன் என்றும் பேசியிருப்பார்.

இப்படி அவதூறாக பேசியும் கூட யுவராஜ் சிங் ஏன் தனது தந்தையை தடுத்து நிறுத்தாமல் இருக்கிறார் என பல கேள்விகள் யுவராஜ் சிங் மீது வைக்கப்பட்டது. மேலும், யுவராஜ் சிங் தனது தந்தையை பற்றி கடந்த 2023-ம் ஆண்டில் ஒரு தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியிருப்பார்.

தற்போது, அந்த வீடியோவில் அவர் தந்தையைப் பற்றி பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் யுவராஜ் சிங் பேசியதாவது, “எனது தந்தைக்கு சில நாட்களாக மன நிலை சரியில்லை. அவர் அதை ஒற்றுக் கொள்ளவும் மாட்டார். அவர் பேசுவதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்”, என்று கூறியிருந்தார்.

யுவராஜ் சிங், அவரது தந்தையை பற்றி பேசிய இந்த வீடியோ தற்போது தோனி ரசிகர்களால் வைரல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், யுவராஜ் தனது சுயசரிதையில் அவரது தந்தையை பற்றி தெரிவித்திருந்தார். அதில், “எனது தந்தை மிகவும் கண்டிப்பானவர்.

நான் சிறுவயதில் பேட்டிங்கில் ரன் அடிக்கவில்லை என்றால் என்னை வீட்டிலே அவர் சேர்க்க மாட்டார். ஒரு முறை சதம் அடித்த போதும் வீட்டிற்கு சென்ற போது, ஏன்? இரட்டை சதம் அடிக்கவில்லை என கேட்டார். இதனால், எனக்கு வீட்டில் நிம்மதி இல்லை. மேலும், என் அப்பாவும், அம்மாவும் சண்டையிட்டு பிரிந்த பிறகு நான் அம்மாவுடனே இருந்து வருகிறேன்”, என அதில் தெரிவித்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்