கபில் தேவுக்கு ஒன்றும் தெரியாது… கோலி பற்றிய விமர்சனத்துக்கு ரோஹித் சரியான பதிலடி…

Default Image

போட்டிக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பது பற்றி கபில்தேவுக்கு ஒன்றும் தெரியாது. கோலி பற்றிய கருத்துக்கு ரோஹித் சர்மா பதில் கூறியுள்ளார். 

விரைவில் உலகக்கோப்பை வரவுள்ள நிலையில், இந்திய அணி வீரர்களின் தற்போதைய ஃபார்ம் பலரையும் கொஞ்சம் பதட்டமடைய தான் வைத்து வருகிறது.

இது குறித்து பேசியிருந்த, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவ், ‘ தற்போது ரோஹித் சர்மா, விராட் கோலி , ரிஷப் பண்ட் ஆகியோரின் ஃபார்ம் கொஞ்சம் மோசமாக இருக்கிறது. அதுவும் கோலியின் ஃபார்ம் அனைத்து ஃபார்மட்டிலும் மோசமாக இருக்கிறது. உலக கோப்பைக்கு அவர் பிளேயிங் டீமில் இல்லாமல் கூட போகலாம்’ என்பது போல கருத்து தெரிவித்து இருந்தார்.

இது குறித்து அண்மையில் பேசியிருந்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, ‘ போட்டிக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பது பற்றி கபில்தேவுக்கு ஒன்றும் தெரியாது. எங்களிடம் ஒரு யோசனை உண்டு. நாங்கள் ஒரு தேர்வு குழுவை வைத்து இருக்கிறோம். அவர்களோடு விவாதங்கள் நடைபெறும். தேர்வுக்குழு எடுக்கும் முடிவுகளை நாங்கள் ஆதரிக்கிறோம். வெளியில் நடப்பது முக்கியமல்ல.’ என பேசியிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்