ஐபிஎல் போட்டிகள் இனி இந்தியாவில் தான்- சவுரவ் கங்குலி

Default Image

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இனி வழக்கம் போல இந்தியாவில் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா நெருக்கடி காரணமாக ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது, இதனால் 2020 ஆம் ஆண்டில் இருந்து குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே வைத்து நடைபெற்றது.

2020 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 இடங்களில் நடைபெற்றது, 2021 ஆம் ஆண்டில் இரண்டு பகுதிகளாக இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடைபெற்றது. 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் வைத்து நடைபெற்றாலும் பழைய முறைப்படி நடக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகள் இனி பழைய முறைப்படி ஒவ்வொரு அணியும் ஹோம் மற்றும் அவே (Home & Away) போட்டிகளில் விளையாடும் என சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.

மேலும் சவுரவ் கங்குலி, அடுத்த ஆண்டு மகளிருக்கான ஐபிஎல் தொடர் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியாவில் மகளிருக்கான கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்காக அதிகமான கிரிக்கெட் போட்டிகள் மகளிருக்காக நடத்தப்படும் என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

15 வயத்துக்குட்பட்ட மகளிருக்கான ஒருநாள் போட்டிகளை தொடங்கவுள்ளதாக அவர் கூறினார். உலக கிரிக்கெட்டில் மகளிருக்கான கிரிக்கெட் போட்டிகள் அமோக வரவேற்ப்பைப் பெற்றுள்ளது, அதனால் இளம் இந்திய மகளிருக்கு கிரிக்கெட்டில் நுழையும் வாய்ப்பை பிசிசிஐ, மேலும் எளிதாக்குகிறது என்று சவுரவ் கங்குலி தெறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்