#INDvsENG : இந்தியாவை புரட்டி போட்ட ஜோ ரூட் ..! 302 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி ..!

இந்தியா, இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இன்று காலை ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் இந்திய அணியின் இளம் வீரரான ஆகாஷ் தீபின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

Read More :- #NZvsAUS : நியூஸிலாந்து அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி ..!

அதன் பின் தட்டுத்தடுமாறி இங்கிலாந்து அணி ரன்களை சேர்த்து ஒரு கட்டத்தில் 112 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மீண்டும் தடுமாறியாது. அதன் பின் களமிறங்கிய ஜோ ரூட்டும், பென் ஃபோக்ஸும் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க தொடங்கினர். இவர்களது விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்திய அணி திணறியது.

இதன் மூலம் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் உயரவும் தொடங்கியது. இருவரது கூட்டணியில் இங்கிலாந்து அணி 225 ரன்களை எட்டிய போது நன்றாக விளையாடிய பென் ஃபோக்ஸ் 47 ரங்களுக்கு சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின் தொடர்ந்து அடுத்த விக்கெட்டும் விழுந்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய ஒல்லி ராபின்சன், ஜோ ரூட்டுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினார்.

Read More :- #INDvsENG : அறிமுக போட்டியில் இங்கிலாந்தை அளரவிட்ட ஆகாஷ் தீப் ..!

மறுமுனையில் ஜோ ரூட் மமிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். இறுதியாக, முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்கள் விளையாடி 7 விக்கெட்டை இழந்து 302 ரன்கள் எடுத்திருந்தது. மேலும், ஜோ ரூட் 226 பந்துகளுக்கு 106 ரன்களும், ஒல்லி ராபின்சன் 60 பந்துகளுக்கு 31 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இந்த 4-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்