INDvsBAN TestSeries: 3-வது நாள் முடிவில் வங்கதேசஅணி 42/0 ரன்கள் குவிப்பு.!

Default Image

இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 3-வது நாள் முடிவில் வங்கதேசஅணி 42/0 ரன்கள் குவிப்பு.

இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 410 ரன்களுக்கும், வங்கதேச அணி 150 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது.

இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. வங்கதேச அணியை விட 254 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி கில் மற்றும் புஜாரா சதத்துடன் 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து 512 ரன்கள் முன்னிலையுடன் டிக்ளர் செய்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 110 ரன்களும், புஜாரா 102* ரன்களும் குவித்தனர்.

513 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் குவித்துள்ளது. நஜ்முல் ஹூசைன் 25 ரன்களும், சாகிர் ஹசன் 17 ரன்களும் குவித்து விளையாடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்