இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய மகளிர் அணி !!!!!

Default Image
  • இரண்டாவது ஒருநாள் போட்டி  இன்று மும்பையில்  நடைபெற்றது.
  • இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்  2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்  கடந்த 22-ம் தேதி மும்பையில்  நடைபெற்ற முதல் ஒருநாள்  போட்டியில் முதலில்  பேட்டிங் செய்த இந்திய அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.அடுத்ததாக களம் இறங்கிய இங்கிலாந்து அணி 136  ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இதனால்  66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி  இன்று நடைபெற்றது.  முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து  அணி 43.3 ஓவரில்  161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்ததாக களம் இறங்கிய இந்திய அணி 41.1 ஓவரில்  3 விக்கெட் இழப்பிற்கு 162 ரன் எடுத்து வெற்றி பெற்றது .

இந்திய அணியில் அதிகபட்சமாக  மந்தனா-63, மிதாலிராஜ்-47* ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்  2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை உள்ளது.மேலும் இந்திய அணி இத்தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் வருகின்ற 28-ம் தேதி 3வது ஒருநாள் போட்டி மும்பையில் நடைபெற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்