எங்களின் மும்மூர்த்திகள் படை….கோலியை வீழ்த்த போதும்…ஆஸ்தி.,வீரர் அதிரடி பேச்சு..!!

Default Image

எங்களின் மும்மூர்த்திகளான ஸ்டார்க், ஹசில்வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகிய வீரர்களால் விராட் கோலியை கட்டுப்படுத்துவோம் என்று ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.
Image result for கோலி
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும்  இந்தியா  நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.இந்த தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இந்நிலையில் சென்ற முறை இந்தியா ஆஸ்திரேலிய தொடரை 0-2 என இழந்தது எனினும் விராட் கோலி தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான்கு சதங்களுடன் அவர் 692 ரன்கள் குவித்தார். இதில் சராசரி 86.50 என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் உலகில் விராட் கோலி நம்பமுடியாத ஒரு வீரராக உள்ளார் இந்நிலையில் விராட் கோலியை எங்களுடைய மும்மூர்த்திகள் கொண்ட படை கட்டுப்படுத்தும் என ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேனான டிராவிஸ் ஹெட் அதிரடியாக தெரிவித்துள்ளார்.இது குறித்து டிராவிஸ் பேசுகையில் எங்களுடைய அணி  பந்து வீச்சாளர்கள் இந்திய வீரர் விராட் கோலியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

மேலும் நான் பந்து வீச்சாளர் ஸ்டார்க் மற்றும் ஹசில்வுட் , பேட் கம்மின்ஸ்  ஆகிய மூவரும் எவ்வளவு கடின பயிற்சி எடுத்திருக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். இதுவே விராட்க்கு போதுமான  நெருக்கடியை கொடுக்க முடியும். இந்த உலகத்தில் எல்லோருமே மனிதர்கள்தானே மேலும் விராட் சிறந்த வீரர் என்பது எங்களுக்கும் தெரியும். நான் அவரை பெங்களூருவில் தான் முதன்முதலாக பார்த்தேன்.அவர் மிக சிறப்பான வீரர். ஆனால் விராட்டை வீழ்த்தக்கூடிய பந்து வீச்சாளர்களை நாங்கள் பெற்றுள்ளோம்.எங்கள் அணியின் மூன்று பேரும் உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களின் குழு. மேலும் இந்த போட்டி மிகவும் சிறப்பான போட்டியாக இருக்கப்போகிறது.இவ்வாறு தெரிவித்த அவர் நாங்கள் இந்தியாவை வீழ்த்தி இந்த போட்டியில் முன்னேறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்