கிரிக்கெட் மைதானத்திலே உயிரிழந்த நடுவர்..! நடந்தது என்ன ?

கராச்சியில் உள்ள டிஎம்சி மைதானத்தில் நடந்த கிளப் கிரிக்கெட் போட்டியில் அம்பயரிங் செய்துக் கொண்டிருந்த நசீம் ஷேக் என்ற 56 வயது அம்பயர் திடீரென மைதானத்திலேயே

கராச்சியில் உள்ள டிஎம்சி மைதானத்தில் நடந்த கிளப் கிரிக்கெட் போட்டியில் அம்பயரிங் செய்துக் கொண்டிருந்த நசீம் ஷேக் என்ற 56 வயது அம்பயர் திடீரென மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலே நசீம் உயிரிழந்தார். இவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருவத்துவர் அறிவித்தனர்.

யார் இந்த நசீம் ஷேக் ?நசீம் ஷேக் கறிக்கடை வியாபாரி ஆவார். இவர் கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவருக்கு கிரிக்கெட் மீதான ஆர்வத்தால் பல போட்டிகளில் அம்பயராக செயல்பட்டு வருவார்.