பந்து வீச்சில் மிரட்டிய ஆஸ்திரேலியா …174 ரன்னில் சுருண்ட இந்தியா..!

ந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது  டி20 போட்டி ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர்.  இதில் சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் 28 பந்தில் 37 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்  8 ரன்னிலும், கேப்டன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.

இதனால் இந்திய அணி 63 ரன்களுக்கு மூன்று விக்கெட்டை இழந்தது. இதை எடுத்து தொடக்க வீரர் ருதுராஜ், ரிங்கு சிங்  இருவரும் சற்று நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இதில் நிதானமாக விளையாடி வந்த ருதுராஜ் 32 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து ஜிதேஷ் சர்மா களம் இறங்க களத்தில் விளையாடி வந்து ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி 29 பந்தில் 46 ரன்கள் எடுத்து விக்கெட்டை கொடுத்தார்.

அதில் இரண்டு சிக்ஸர், 4 பவுண்டரி அடங்கும். மறுபுறம் விளையாடி வந்த ஜிதேஷ் சர்மா 19 பந்தில் 35 ரன்கள் எடுக்க இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டைகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியில் பென் துவர்ஷுயிஸ் 3 விக்கெட்டையும், தன்வீர் சங்கா, ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் தலா  2  விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்