IndvsEng : முதல் நாள் முடிவு…119 ரன்கள் குவித்த இந்தியா!!

INDvENG

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்து. அதிகபட்சமாக முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் ஸ்டோக்ஸ் 70, பேர்ஸ்டோவ் 37, டக்கெட் 35, ரன்கள் எடுத்தனர்.

IndvsEng: சச்சின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்!!

இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில், ரவீந்திர ஜடேஜா 3, அஷ்வின் 3, அக்சர் படேல் , பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார்கள்.  இங்கிலாந்து அணியை தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்கிஸை தொடங்கிய இந்திய கிரிக்கெட் அணியில் ரோஹித் சர்மா 27 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அட்டமிழந்து வெளியேறினார்.

அவருடன் களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடினார் என்றே கூறலாம். அவருடைய அதிரடியின் ஆட்டம் காரணமாக இந்திய அணி நல்ல ஸ்கோரையும் எட்டியது.  அதன்படி, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்களை குவித்துள்ளது.

INDvsENG: அனில் கும்ப்ளே ஹர்பஜன் சிங் சாதனையை ஓரம் கட்டிய அஸ்வின் – ஜடேஜா!

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 76 ரன்களை குவித்து அவுட் ஆகாமல் உள்ளார். அவருடன் களத்தில் சுப்மன் கில் 14 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார். முதல் நாள் முடிவில் இந்தியா 127 ரன்கள் பின்தங்கியுள்ளது. இரண்டாவது நாள் ஆட்டம் நாளை  தொடங்குகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்