திடீரென தொடரிலிருந்து வெளியேறி முக்கிய வீரர்..? ஆப்கானிஸ்தான் அணியில் மாற்றம்..!

இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கு முன், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. டி20 உலகக்கோப்பைக்கு முன் இந்தியா விளையாடும் கடைசி டி20 தொடர் இதுவாகும். டி20 தொடருக்கான இந்திய அணியை ரோஹித் சர்மாவும்,  ஆப்கானிஸ்தான் அணியை இப்ராகிம் சத்ரான் ஆகியோர் வழிநடத்துகின்றனர். இத்தொடரின் முதல் போட்டி மொஹாலி மைதானத்தில் நாளை ( ஜனவரி 11ஆம் தேதி) நடைபெறவுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பைக்குப் பிறகு ரஷித் கான் முதுகுக்குப் பின் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். காயம் காரணமாக அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில் கூட விளையாடவில்லை. தற்போது இந்த தொடரிலும் வெளியேறினால்  அணிக்கு பெரிய அடியாக பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியை தொடங்கிய தல தோனி! வைரலாகும் வீடியோ..

வழக்கமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டன் ரஷித் இருந்த நிலையில், அறுவை சிகிச்சைக்கு பின் ரஷித்கானுக்கு   பதிலாக இப்ராகிம் சத்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் சத்ரன் கேப்டனாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
Nellai Iruttukadai Halwa shop
mayank yadav brother
Actor Sri
TN CM MK Stalin speech in TN Assembly
Edappadi Palaniswami
PMK Leader Anbumani ramadoss Press meet