இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையே நாளை 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி ..!

Default Image

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையே 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை முடிந்துள்ள மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட்டில் 275 ரன்கள் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்று 3-0 என தொடரை வென்று ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துக் கொண்டது.

இந்நிலையில், நாளை 4-வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில்  நடைபெறவுள்ளது. இங்கிலாந்து அணியில்  ஓலி ராபின்சன் காயம் காரணமாக நாளைய போட்டியில் விளையாடவில்லை. இதனால் ஸ்டூவர்ட் பிராட் அணியில்சேர்க்கப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்