கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? – அமைச்சர் பொன்முடி விளக்கம்!

Higher Education Minister Ponmudi has said that the Chief Minister will announce the opening of schools and colleges in Tamil Nadu.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரம் காரணமாக நடப்பு ஆண்டில் இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து, தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், பள்ளி, கல்லூரிகள் திறக்க தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளி, கல்லூரி திறப்பது குறித்து சுகாதாரத் துறையினருடன் ஆலோசித்து அதன் பின்னர் முதலமைச்சர் முக ஸ்டாலின்  முடிவை தெரிவிப்பார் என்று விளக்கமளித்துள்ளார். திட்டமிட்டபடி ஆகஸ்டு 1 முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.