திரிணாமுல் காங்கிரசில் கட்சியில் இணைந்த,முன்னாள் ஜனாதிபதியின் மகன்...!

West Bengal MP Abhijit Mukherjee, son of former President Pranab Mukherjee, today joined the Trinamool Congress (TMC).

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களின் மகனும், மேற்கு வங்க காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஜித் முகர்ஜி, திரிணாமுல் காங்கிரசில் (டிஎம்சி) இன்று இணைந்தார்.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களின் மகனும்,மேற்கு வங்க காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஜித் முகர்ஜி இன்று திரிணாமுல் காங்கிரசில் (டிஎம்சி) சேர்ந்தார். கொல்கத்தாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் மூத்த டி.எம்.சி தலைவர்கள் முன்னிலையில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கட்சியில் இணைந்தார்.

மேலும்,இதுகுறித்து அபிஜித் முகர்ஜி கூறுகையில்:”மாநில காங்கிரஸ் கட்சி என்னை எந்த வகையிலும் சரியாக பயன்படுத்தவில்லை.ஒவ்வொரு அரசியல் வேலைத் திட்டத்திலும் நான் புறக்கணிக்கப்படுகிறேன். எனவே,திரிணாமுல் கட்சியில் சேருவது பொருத்தமானது என்று நான் நினைத்தேன், ஏனெனில் மம்தா பானர்ஜி பாஜகவுக்கு எதிரான மிகவும் ஒரு நம்பிக்கையான முகமாக தெளிவாக வெளிப்பட்டுள்ளார்.” என்று கூறினார்.

இதனையடுத்து,காங்கிரசுடன் இருக்கும் அவரது சகோதரி ஷர்மிஸ்தாவைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது,அபிஜித் கூறியதாவது,”ஷர்மிஸ்தா ஒரு சுதந்திரமான மற்றும்  திறமையானவர்,சொந்தமாக முடிவுகள் எடுக்கும் தகுதியுடையவர்”, என்றார்.

அபிஜித் முகர்ஜி தனது தந்தையின் ஜாங்கிபூரில் உள்ள மக்களவையில் இரண்டு முறை எம்.பி.யாக இருந்து வருகிறார்.

அபிஜித் முகர்ஜி டி.எம்.சி.கட்சிக்கு மாறுவது காங்கிரசுக்கு ஒரு பெரிய சங்கடமாக கருதப்படுகிறது.ஏனெனில்,காங்கிரஸ் கட்சி சமீபத்திய ஆண்டுகளில் ஜோதிராதித்யா சிந்தியா, ஜிதின் பிரசாதா, ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்ட அக்கட்சியின் சில முக்கியமானவர்களை இழந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு,கொல்கத்தாவில் போலி தடுப்பூசி விவகாரத்தின் போது அபிஜித் முகர்ஜி, மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“ஒரு போலி தடுப்பூசி முகாமுக்கு ஆள்மாறாட்டம் செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி டெபஞ்சன் தேப்க்காக,மம்தா பானர்ஜி தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டப்பட வேண்டுமென்றால், நீரவ் மோடி, விஜய் மல்லையா, மெஹுல் சோக்ஸி போன்றவர்கள் செய்த அனைத்து மோசடிகளுக்கும் நிச்சயமாக மோடி அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட வேண்டும்.எனவே ஒரு தனிப்பட்ட செயலுக்கு மேற்கு வங்க அரசாங்கத்தை குறை கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை”,என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.