நாங்கள் தான் முதலில் சொன்னோம்.. இப்போ முதலமைச்சர் அதனை சொல்லியிருப்பது மகிழ்ச்சி – கமல்ஹாசன்

Kamal Haasan tweeted that the party that first proposed that Tamil Nadu could be transformed into a one trillion economy was the makkal needhi maiam.

தமிழகத்தை ஒன் டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற முடியும் எனும் முதலில் முன்வைத்த கட்சி மக்கள் நீதி மய்யம் என்று கமல்ஹாசன் ட்வீட்.

சென்னை கிண்டியில் நட்சத்திர விடுதியில் நேற்று ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு’ என்ற விழா நடைபெற்றது. இந்த விழாவில் ரூ.28,508 கோடி மதிப்பில், மொத்தம் 49 திட்டங்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதன்பின் இவ்விழாவில் பேசியா முதல்வர், தமிழ்நாடு முதலீட்டார்களின் முதல் முகவரியாக மாறவேண்டும் என்றும் நிச்சியம் மாறும் எனவும் தெரிவித்தார். உலகளவில் உற்பத்தி துறை மிகமோசமாக பாதிக்கப்பட்டு இருந்தாலும், தமிழகத்தை பொருளாதாரம் புத்துணர்வு பெற்று இயங்க ஆரம்பித்துள்ளது.

மேலும், தெற்கு ஆசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாக தமிழகத்தை உயர்த்துவது தான் அரசின் லட்சியம். 2030ம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரம் (ஜிடிபி) படைத்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவது தான் அரசின் குறிக்கோள் எனவும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், தமிழகத்தை ஒன் டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும், மாற்ற முடியும் எனும் இலக்கினை முதன் முதலில் முன்வைத்த கட்சி மக்கள் நீதி மய்யம். இப்போது தமிழக முதல்வரும் 2030-ல் அந்த இலக்கை எட்டும் பாதையைத் தேர்ந்துள்ளார் என்பதில் மகிழ்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

unknown node