பொதுமக்கள் தினமும் வெளியே வரக்கூடாது – காவல்துறை எச்சரிக்கை

The Madurai Metropolitan Police has warned the public not to leave their homes daily to buy goods.

பொதுமக்கள் பொருட்கள் வாங்க தினசரி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று மதுரை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

விநியோக சேவைகளை பயன்படுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பலசரக்கு மற்றும் காய்கறிகளை அருகில் உள்ள கடைகளில் வாங்கிக்கொள் வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தனிமனித இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரையில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டியிருக்கிறது. காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், மக்கள் அதிக அளவில் வெளியில் சுற்றி வருகிறார்கள் என்று தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

இதனைத்தொடர்ந்து நேற்று தமிழக டிஜிபி, இந்த கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது என்று எச்சரிக்கை விதித்திருந்த நிலையில், தற்போது மதுரை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.