#Breaking:அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

The Chennai High Court has quashed the case against Ministers Thamo Anparasan and Ma Subramanian.

அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் கே.கே.நகர் வாக்குச்சாவடிக்கு சென்று பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு எதிராக அப்போதைய அதிமுக அரசால் போடப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுகவினர் மனு தாக்கல் செய்திருந்தனர்.மேலும்,10 ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்த விசாரணையும் நடக்கவில்லை என மனுதாரர் தரப்பு வாதிட்ட நிலையில், கார் தீ வைக்கப்பட்டதா என்று சேத மதிப்பீட்டு அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை எனக்கூறி வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

#Breaking:அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!