தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை நடைபெறவுள்ள நிலையில்அரசியல் கட்சிகள் பிரச்சாரம், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தற்போது அதிமுக, திமுக இரு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
சமீபத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மீனவர்களின் பாதுகாப்புக்காக வாங்கிய வாக்கிடாக்கியில் அமைச்சர் ஜெயக்குமார் ரூ.300 கோடி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்நிலையில், ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர தமிழக அரசு ஒப்புதலைப் பெற்ற அரசாணை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார்.
unknown nodeஇதனால், விரைவில் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.