தமிழக சட்டப்பேரவைகூட்டம் கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி தொடங்கி கடந்த 16 நாள்கள் தொடர்ந்து நடைபெற்றது.இந்த நாள்களில் பல்வேறு துறை சம்மந்தமான பிரச்சனைகள் குறித்தும் , மானிய கோரிக்கைகள் குறித்தும் பல விவாதங்கள் நடைபெற்றது.
unknown nodeமேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியின் கீழ் பல திட்டங்களை அறிவித்தார்.இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சி பல்வேறு கவன ஈர்ப்பு திட்டங்களை கொண்டு வந்தனர்.அதற்கு அரசு தரப்பில் இருந்து பல்வேறு விளக்கங்கள் கொடுத்தனர். இந்நிலையில் தற்போது சட்டப்பேரவை முடித்த நிலையில் சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைப்பதாக உத்தரவு விட்டுள்ளார்.