டவ் தே புயலால் காணாமல் போன 21 மீனவர்கள் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “டவ் தே” புயலால் காணாமல் 21 மீனவர்களை மே 15 முதல் இதுவரை தொடர்ந்து தேடப்பட்டும் கண்டுபிடிக்க இயலாத நிலை உள்ளது. எனவே “டவ் தே” காரணமாக காணாமல் 21 மீனவர் குடும்பங்களின்வறிய நிலையைக் கருத்தில் கொண்டு காணாமல் போன மீனவர்களது வாரிசுதாரர்களுக்கு தலா 20 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
unknown node