நாட்டின் எதிர்காலத்துடன் பிரதமர் மோடி விளையாடுகிறார் – ராகுல் காந்தி!

Former Congress leader Rahul Gandhi has accused Prime Minister Narendra Modi of playing tricks on the country's future.

திசை திருப்பி நாடகமாடி நாட்டின் எதிர்காலத்துடன் பிரதமர் மோடி விளையாடுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று பிரதமர் மோடி அவர்கள் காணொலி காட்சி வாயிலாக டாய்கேத்தான் -2021 எனும் பெயரில் நடைபெற்ற பொம்மைகள் கண்காட்சி பங்கேற்பாளர்கள் உடன் கலந்துரையாடியுள்ளார். அப்பொழுது அவர் இந்தியாவின் திறன்கள், கலை, கலாச்சாரம் மற்றும் சமூகத்தை உலகம் புரிந்து கொள்ள விரும்புவதாகவும், இளைய தலைமுறையினர் நாட்டின் திறன்கள் மாற்றும் யோசனைகளை உண்மையானது  என்பதை உலகுக்கு முன் வைக்கும் பொறுப்பை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிறு குறு நடுத்தர நிறுவனங்களில் பணிபுரிய கூடிய ஊழியர்கள் வேலை இல்லா நிலையை தற்பொழுது சந்தித்து வருவதாகவும், ஆனால் பிரதமர் மோடி இந்தியாவின் தற்போதைய நிலையை நாடகமாடி கவனத்தைத் திசை திருப்புவதாகவும் கூறியுள்ளார். மேலும் நாட்டின் எதிர்காலத்துடன் பிரதமர் விளையாடுவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node
நாட்டின் எதிர்காலத்துடன் பிரதமர் மோடி விளையாடுகிறார் – ராகுல் காந்தி!