குடியரசு தலைவர் வருகை – தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை!

Following the President's visit to Tamil Nadu, the Chief Secretary is conducting a divine consultation.

தமிழகத்திற்கு குடியரசு தலைவர் வருகையையொட்டி தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர், திமுக தலைவருமான மறைந்த கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார் என தெரிவித்தார் என பாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். படம் திறப்பு விழாவில் ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

இந்த நிலையில், ஆகஸ்ட் 2ம் தேதி குடியரசுத் தலைவரின் தமிழ்நாடு வருகையை ஒட்டி, நிகழ்ச்சி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.