திரிபுரா வீட்டு வசதி திட்ட பயனாளிகளுக்கு இன்று சுமார் ரூ.700 கோடி அளவிலான நிதியை முதல் தவணையாக பிரதமர் மோடி வழங்க உள்ளார்.
திரிபுராவில் ஏராளமான மக்கள் அதிக பலமில்லாத வீடுகளில் வசித்து வருவதாக கூறப்படும் நிலையில்,பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) என்ற திட்டத்தின்கீழ் நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் முதல் தவணையை திரிபுராவின் 1.47 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 1 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் வழங்குகிறார்.
அதன்படி,இந்த விழாவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் என மொத்த மதிப்பில் சுமார் ரூ.700 கோடி நிதி நேரடியாக வரவு வைக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும்,இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“இன்று மதியம் 1 மணிக்கு, திரிபுராவின் 1.47 லட்சம் பயனாளிகளுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமின் (PMAY-G) முதல் தவணை வழங்கப்படும். இது மாநில மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பெரும் உத்வேகத்தை அளிக்கும்”,என்று தெரிவித்துள்ளார்.
unknown nodeஇதன்மூலம்,திரிபுராவில் உள்ள “கச்சா” வீடு என்ற முறை (மூங்கில், களிமண், புல், ஆளி, கூழாங்கற்கள், தழைக்கூளம், பயிர் எச்சங்கள் மற்றும் பலவற்றால் கட்டப்பட்ட கட்டமைப்புகளைக் கொண்டவை) மாற்றப்பட்டுள்ளது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. திரிபுராவின் புவி-காலநிலை நிலை பிரதமரின் நேரடித் தலையீட்டைத் தொடர்ந்து இது மேற்கொள்ளப்பட்டது, மேலும் இது மாநிலத்தில் “கச்சா” வீடுகளில் வசிக்கும் ஏராளமான பயனாளிகளுக்கு “புக்கா” வீடு (மரம், செங்கற்களால் செய்யப்பட்ட வலுவான கட்டமைப்புகளைக் கொண்ட)வீடு கட்டுவதற்கான உதவியைப் பெற இத்திட்டம் உதவியது.
குறிப்பாக,2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் “அனைவருக்கும் வீடு” என்ற வீட்டுவசதி இலக்கை அடைவதை இலக்காகக் கொண்ட பிரதமர் மோடி அரசாங்கத்தின் லட்சிய நோக்கமாக இந்தத் திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.