7 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு காணாமல் போன தென்கொரிய சியோல் நகர மேயர் பார் வோன் சூன் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் ஆளும் இடது கட்சியை சேர்ந்த பார்க் வோன் சூன் கடந்த ஆண்டுகளாக 3 முறை சியோல் நகர மேயராக பணியாற்றி வந்தவர்.மேலும் தென்கொரிய அதிபர் தேர்தலுக்கு இவர் போட்டியிட அதிக வாய்ப்புகள் கணிக்கப்பட்டது.
unknown nodeஇந்நிலையில் தனது தந்தையை காணவில்லை என்று பார்க்கின் மகள் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ளமுடியவில்லை என்றும் போலீசில் அளித்தார். புகாரை அடுத்து 600க்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
பார்க்கின் செல்போன் சிக்னல், கண்காணிப்பு கேமரா ஆகியவற்றின் உதவியோடு சுமார் 7 மணி நேரமாக நிலவி வந்த இந்த தேடலில் மேயர் பார்க் வோன் சூன் பற்றி தகவல் வெளிவந்தது.
unknown nodeதேடலில் சியோலின் வடக்கு பகுதியில் பார்க்கின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.மேலும் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.உயிரிழந்த பார்க் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கடத்தி அவரை கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.