மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறக்கும் நாள், தமிழக மக்கள் பெருமை கொள்ளும் நாள் – எம்பி, கனிமொழி

DMK MP Kanimozhi has said that the leader who did not see the defeat in the election was the late former Chief Minister Karunanidhi.

தேர்தலில் தோல்வி என்பதை பார்க்காத தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எம்பி கனிமொழி, தமிழக்தில் தேர்தலில் தோல்வி என்பதை பார்க்காத தலைவர் கருணாநிதி அவர்கள் என்றும் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வென்று மக்கள் பணியாற்றியவர் கருணாநிதி எனவும் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம்  திறக்கப்படும் நாள் தமிழ் மக்கள் பெருமை கொள்ளும் நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் நாளை திறக்கப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை தமிழகம் வருகை தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.