சுஷ்மா சுவராஜ் பொதுச்சேவைக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் – மோடி இரங்கல் !

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக  முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக  முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை கொடுக்கப்பட்டது.

சுஷ்மா சுவராஜ் மருத்துவமனையில் அனுமதித்ததும் பாஜக தலைவர்கள் நிதின் கட்கரி, ஹர்ஷ வர்தன்  ஆகியோர்  மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.பின்னர் மருத்துவமனையில் சிகிக்சை பலனின்றி சுஷ்மா சுவராஜ் காலமானார்.

unknown node

இந்நிலையில் சுஷ்மா சுவராஜ் மறைவிற்கு பிரதமர் மோடி தனது ட்விட்டரில் இரங்கல் வெளியிட்டு உள்ளார். அதில் பொதுச்சேவைக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். அவரது மறைவால் ஒட்டுமொத்த இந்தியாவும் வருந்துகிறது. இந்திய அரசியலில் ஒரு புகழ்பெற்ற அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது.எந்த துறை கொடுத்தாலும் சிறப்பாக செயல்பட்டவர் சுஷ்மா என  பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.