பொங்கல் திருநாளன்று "ராகுலின் தமிழ் வணக்கம்"  தமிழகத்தில் தொடக்கம் – கே.எஸ்.அழகிரி

It has been reported that the title of Rahul Gandhi's election campaign in Tamil Nadu is 'Rahulin Thamizh Vanakkam'.

தமிழ்நாட்டில் ராகுல் காந்தி மேற்கொள்ளவுள்ள தேர்தல் பரப்புரையின் தலைப்பு ராகுலின் தமிழ் வணக்கம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளன்று “ராகுலின் தமிழ் வணக்கம்”  தமிழகத்தில் தொடங்க உள்ளது.ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்..இந்த வருகையின் மூலமாக இந்தியா முழுவதும் போராடி வருகின்ற விவசாயிகளுக்கு ஒரு தார்மீக ஆதரவை ராகுல் காந்தி தர இருக்கிறார்.மோசமான ஆட்சியை தூக்கி எறிய ராகுலின் தமிழ் வணக்கம் நிகழ்ச்சி அச்சாரமாக அமையும்.விவசாயிகளிடம் ராகுல் காந்தி சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது. திமுக – காங்கிரஸ் கூட்டணி சுமூகமாக உள்ளது.காங்கிரஸிற்கான தொகுதிகள் குறித்து பேசி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.