50 கோடி ரூபாய் செலவழித்தாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்காது – சி.வி.சண்முகம் எச்சரிக்கை!

Former minister CV Shanmugam warns that victory will not come unless the AIADMK branch is formed.

அதிமுக கிளை கழகத்தை கட்டமைக்காவிட்டால் வெற்றி கிடைக்காது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை.

விழுப்புரத்தில் நடைபெற்ற மாவட்ட அதிமுக கழக அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், சட்டமன்ற தேர்தலுக்கு 4 ஆண்டுகளும், எம்பி தேர்தலுக்கு 2 ஆண்டுகளும் அவகாசம் உள்ள நிலையில், அதிமுக கிளை கழகத்தை முறையாக கட்டமைக்க வேண்டும்.

அப்படி அதிமுக கிளை கழகங்களை சரியாக கட்டமைக்காவிட்டால் ரூ.50 கோடி செலவழித்தாலும் ஒரு இடம் கூட வெற்றி கிடைக்காது எனவும் எச்சரிக்கை விடுத்தார். பஞ்சாயத்து பேசி கால நேரத்தை வீண்டிக்க கூடாது என வலியுறுத்தினார். அதிமுக அமைப்பு தேர்தலில் காலியாக உள்ள பதவிகளில் புதிதாக கட்சிக்கு வரும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சிதான் நல்லது செய்வார்கள் என்று நினைத்து மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால், எம்எல்ஏ, எம்பி தேர்தலில் மக்கள் ஆளும் கட்சியின் மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்தி எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

50 கோடி ரூபாய் செலவழித்தாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்காது – சி.வி.சண்முகம் எச்சரிக்கை!